01 மே 2009
*சிறீலங்கா இனவெறி அரசின் ஆக்கிரமிப்பு படையினர் தமிழீழத்தாயகப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்திய கனரக ஆயுத தாக்குதல்களில் 172 பொதுமக்கள் படுகொலை; 289 பேர் படுகாயம். *கனடியத் தமிழ் இளையோர்களால், சிறீலங்கா இனவெறி அரசின் தமிழீழத்தாயக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. *தொழிலாளர் உரிமைகளை வென்றெடுத்த நாளான மே 01 , பிரான்சின் கிழக்குப் பாகத்திலுள்ள ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடாத்தப்பட்ட மே தினப் பேரணியில், ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் வசித்து வருகின்ற தமிழீழ மக்களும், இந்திய தொப்புள் கொடி உறவுகளும் இணைந்து கலந்து கொண்டனர். *தனி நபர் ஒருவரை அழிப்பதற்காக சிறீலங்கா இனவெறி அரசின் ஆக்கிரமிப்பு, ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டின. *சிறீலங்கா இனவெறி அரசின் படையினர் முன்னெடுத்த ஆக்கிரமிப்பினால், தமிழீழ பகுதியில் இருந்து உயிர் தப்பிக்க தமிழகம் இராமேஸ்வரம் சென்ற ஈழத் தமிழ் அகதிகளின் படகு நடுகடலில் திசைமாறியதால் உணவு, குடிநீர் இன்றி பட்டினியால் பரிதவித்து 10 தமிழீழத்தமிழர்கள் பலியாகினர். *தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்.. நடைப்பிணமாக ஈழக் குழந்தைகள்!: கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு. தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. *இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட வேண்டும், என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார். இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இக்கருத்தை அவர் தெரிவித்தார். *அரசாங்கத்தின் அகோரத்தாக்குதல் ஐ. நா செய்திமதியில் அம்பலம் .இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மீது அகோரத்தாக்குதல் நடத்தியதை, ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதி படம் பிடித்தது. *இடம்பெயர்வுகளுக்கு உள்ளான மக்களுக்கு, நிரந்தர குடியிருப்புகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியறுத்தியது. *இத்தாலி தொழிற்சங்கங்களுடன் இணைந்து இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் மேதினப் பேரணி ஒன்றை ரொறினோ மாநகரில் நடத்தியது. *பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனுக்கு கொடுத்த உறுதி மொழி விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை தங்களுடைய முதன்மை கோரிக்கையாகவும் பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளித்தும் 4 பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை இரவு 10 மணியில் இருந்து ஆரம்பித்தனர். *முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டன. 150 படையினர் பலி. *பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் அமைந்துள்ள மத்திய பேருந்து தரிப்படத்தின் முன்பாக காலை 10.30 மணியளவில் மேநாள் ஊர்வலம் ஆரம்பமாகியது. பல்லாயிரக்கணக்கான பின்லாந்து மக்களுடன் தமிழ் மக்களும் இணைந்து இவ் ஊர்வலத்தை சிறப்புடன் நடத்தினர். *மரணப்பிடியில் சிக்கி தினமும் மாண்டு கொண்டிருக்கும் தமிழ் உறவுகளுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வெள்ளிக்கிழமை ஒளிதீப ஒன்றுகூடலும் அதை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஊர்வலமும் பின்னர் சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது. *கொழும்பிலும் சுற்றுப்பகுதிகளிலும் மே தினத்தன்று நடத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 17 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் .
02 மே 2009
*இலங்கை அராசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புகளினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், சர்வதேசத்தின் அழுத்ததை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஜி எட்டு நாடுகள் வலியுறுத்தின. *அயர்லாந்து தலைநகர் டப்லின் ( Dublin) இல் அமைந்திருக்கும் பாராளுமன்றம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதனைத்தொடர்ந்து பேரணியாக அயர்லாந்து மத்திய வங்கி வளாகத்திற்கு சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் ஒன்று கூடலும் இடம்பெற்றது. *டென்மார்க்கின் முக்கிய தலைநகரங்களில் , தமிழ் மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. *ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய இராணுவ ஆயுதங்கள் ஏற்றிவந்த லாரிகள் அதில் 5 லாரிகளை கோவையில் தமிழக தமிழர்கள் அடித்து எரித்துள்ளனர். பலர் கைதுதமிழக தமிழர்களல்டித்து எரித்துள்ளனர். பலர் கைதானனர். *முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்தனர். *முல்லைத்தீவு பாதுகாப்பு வலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிடிக்கப்பட்ட அந்தரங்கச் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் (பிரதி நிதி) நீல்புஹுனே யிடம் விளக்கம் கோரியது. படங்கள் அம்பலமானது குறித்து ஐ.நாவிடம் அரசு ஆட்சேபம்விசாரணை நடத்துமாறு பிரதிநிதி புஹுனேயை அழைத்து அமைச்சர் சமரசிங்க வலியுறுத்தினார். *சர்வதேச நாடுகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் ராஜ்தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - கொஹனே தெரிவித்தார். *சரணடைந்த 3000த்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படாமை மிகவும் மோசமான நிலைமை, - வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமிருந்து தாம் அதிகம் தெரிந்துகொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். *யுத்த வலயத்தில் சுதந்திரமாக தொண்டு நிறுவனங்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் தெரிவித்தார். *விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை தடுத்து வைக்கப்படும் செயன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். *யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்தன. *தமிழீழ தாயகத்தில் எம் உறவுகள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானிய இளையோருக்கு வெளிகாட்டும் வகையில் Dartford பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை அனுமதியுடன் மேல் வகுப்பு மாணவருக்கு தமிழீழ வரலாற்றையும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் 20 நிமிட ஒளித்தொகுப்பு மூலம் காண்பித்து பரப்புரையை முன்னெடுத்தார்கள். *நியூசிலாந்து தமிழ் மகளீர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத வழிபாட்டுக் கவனயீர்ப்பு நிகழ்வு ஒக்கிலாந்து புனித மத்தியோ தேவாலயத்தில் நடைபெற்றது. மதப் பிரமுகர்களும் இதிற் கலந்துகொண்டனர். *சுவீடனில் நந்தன் என்பவரால் உண்ணாநிலைப் போராட்டம் 5ஆவது நாளாக நடாத்தப்பட்டது . அவருக்கு ஆதரவாக சிலர் அடையாள உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டனர். * தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு அளித்த தனி ஈழமே தீர்வு என்ற வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். *தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம். விரட்டியடிப்போம். ஈழத்தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத பாசிச வெறியர்களுக்கு ஆதரவு தரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்க முடியாது. இதை மையமாக வைத்து தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறினார் இயக்குநர் பாரதிராஜா.
03 மே 2009
*தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனை தேவைப்படாதென அரசாங்கம் குறிப்பிட்டது. *பிரிட்டிஷ் பிரெஞ்சு அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்ப் பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரிட்டிஷ், பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்கள் உதவி புரிய வேண்டுமென தெரிவித்தனர். *முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். சண்டையில் 60 படையினர் கொல்லப்பட்டனர். *வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிவாரணப் பணிக்காக ஜப்பான் வழங்கவுள்ள 480 மில்லியன் ரூபா அவர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த நிதி யுத்தத்துக்கே செலவிடப்படும். நிவாரணத்துக்கென நிதிவழங்கி தமிழின அழிப்புக்கு ஜப்பான் துணைபோகக் கூடாது. ஜப்பானின் விசேட தூதர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டது. *தாயகத்தில் இடம்பெறும் தமிழின அழிப்பை தாங்கள் கண்டித்திருப்பதும், தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தனித் தமிழீழம் அமைத்து தருவேன் என தாங்கள் அறிவித்துள்ளதும் தமிழ்மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. இவ்வாறு ஜேர்மனி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியது. *'தமிழினத்திற்கு அன்னை ஜெயலலிதா உந்தன் அன்பு வார்த்தை ஒன்றே போதும். அழியாது என்றும் வாழ்வீர் உலகத் தமிழர் மனங்களில்'இலங்கையில் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என்று மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறும் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு சுவீடன் தமிழர் அமைப்பு வாழ்த்து தெரிவித்தது. *முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 165,000 மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை முற்றாக அழிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இத்தாக்குதல் சம்பவத்தினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பா.உ. கஜேந்திரன் தெரிவித்தார். *இடம் பெயர்ந்து வந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதி நலன்புரி முகாம்களில் உள்ள வயோதிபர்கள் போசாக்கின்மையாலும், சீரான கவனிப்பு இல்லாமையினாலும் 30 பேர் இறந்துள்ளமை தொடர்பாக 30 வழக்குகள் இருப்பதாக தெரிவித்த வவுனியா மாவட்ட நீதிமன்றம் வயோதிபர்களை முகாம்களில் இருந்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. *இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன். என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார். *அவுஸ்திரேலியா சிட்னி நகரில், இலங்கையில் நடந்த பேரின அழிவை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன் வந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிற்சங்க சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.
04 மே 2009 *தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு அரசாங்கதிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தது. *இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் நியமி்த்துள்ள சிறப்பு தூதரான டெஸ் பிரவுன் உள்ளிட்டோர் அடங்கிய இங்கிலாந்து எம்.பிக்கள் குழு ஒன்று கொழும்பு வந்தது. *ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிய கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார். *பிரபாகரன் எங்கள் தலைவர்; நாங்கள் அவரை மதிக்கிறோம்; அவர் எங்களுக்காகவே போராடுகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவர் நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பியிருந்தால் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் இந்திய தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். *ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளையின் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. *அரச சார்பற்ற நிறுவனங்கள் இடைத்தங்கல் முகாம்களில் சேவையாற்ற அனுமதியளிக்கப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்தது. * சுவிஸில் பேர்ண் பாராளுமன்ற முன்றலில் 04.05.09 மாலை 16.30 மணிக்கு கரன் எனும் இளைஞர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்தார்.
மே 05 2009
*வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டனர். *தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச படையினரால் இதுவரை விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள சுமார் நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தங்கியிருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கபாராளுமன்றத்தில் தெரிவித்தார். *யாழ்ப்பாணத்தில் உயிருக்கஞ்சி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைவோரை மனிதவுரிமைகள் ஆணைக்குழு வாகனங்களில் அல்லாமல் தனியார் வாகனங்களில் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. *விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன. *தமிழகத்தின் அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் ஈழக் கோரிக்கை பொறுப்பற்ற செயலாகும் என மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார். *அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தனர். இதில் இரு படையினர் கொல்லப்பட்டனர். * இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஜெனேவா மாநகரில் மாபெரும் தீப்பந்த கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியது. *ஈழத்தமிழர்கள் திட்டமிட்டு இந்திய, ஸ்ரீலங்கா கூட்டுப்படைகளால் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் ஈழத்து உறவுகளும் இரவு பகலாகப் போராட்டங்களை முன்னெடுத்து விடுத்த கோரிக்கைகளுக்கு இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும் அவர்களின் உண்மையான முகத்தினை இன்னும் வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றது. தாயகத்திலிருந்து கா.வே. கரிகாலன் *வன்னியில் உள்ள சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கான உணவு நிவாரணங்களை அனுப்பாதிருப்பதன் மூலம் யார் அந்த மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என்ற விடயத்தை சர்வதேசம் தெரிந்து கொள்ள வேண்டும் என வன்னியில் உள்ள மக்கள் தெரிவித்தார்கள். *ஜேர்மனி டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற வரும் பட்டினிப் போராட்டம் இரண்டு நாளாக தொடர்ந்து நடைபெற்றது. *புத்தள பகுதியில் கிளேமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. * கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார். *மோதல்கள் காரணமாக வன்னியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணத்தை தாம் ஒரு போதும் பகிரங்கப்படுத்தவில்லையென கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்தது. *தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்டபடி, மரக்கட்டையை தூக்கி எறிந்தார். *இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரிட்டனின் விசேட பிரதிநிதியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.அதன்போது இடம்பெயர் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகள் தொடர்பில் விரி வாக ஆராயப்பட்டது. மே 06 2009 *இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவில் போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான பகுதிக்குள் செல்வதற்கு வசதியாக போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு கனேடிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையையும் கொழும்பு அரசு நிராகரித்துவிட்டது.தாம் வகுத்த திட்டப்படி செயற்படவே அரசாங்கம் விரும்புகிறது பெவ் ஒடா தெரிவித்தார். *சுவீடனில் நந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் integration minister ஆகிய Nyamko Sabuni தந்த வாக்குறுதியால் நிறைவுபெற்றது. *வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது தமது பெற்றோர்களை இழந்தநிலையில், காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த 6 சிறுவர்களை அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் ஏ ஜூட்சன் உத்தரவிட்டார் *தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவேண்டும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டித்தார்.ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழர்களுக்கு எதிரான கட்சியே: மனோ கணேசன் தெரிவித்தார். *நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சர்வோதயப் பண்ணைக்கு அனுப்பப்பட்ட 3 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். *இலங்கை நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மீண்டும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். *இலங்கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சித்திரிப்பதாக பிரிட்டனின் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்தார். *மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் காயான்மடு பிள்ளையார் கோயிலடியில் வைத்து ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. * வன்னிப் பகுதியில் இதுவரை, தமது கணக்கீட்டின் படி 6500 சடலங்கள் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது தகனம் செய்யப்பட்டதாகவும், அத்துடன் வன்னியில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் லோறன்ஸ் கிறிஸ்டி தெரிவித்தார். *உலக நாடுகள் தடை செய்துள்ள நாசகார இரசாயன குண்டுகளை விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லி, முல்லைத்தீவில் உள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது வீசுவதற்கு சிங்கள அரசு திட்டம் வகுத்து விட்டதாகவும், இதற்குரிய ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்தார். * மனிதாபிமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்றால் தற்போதாவது, தாமதிக்காது வன்னி மக்களுக்கு நேரத்தை வீணாக்காமல், உணவுப்பொதிகளை போடவேண்டும் என வன்னியில் உள்ள சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயத்தில் அமெரிக்கா முன்னின்று செயற்படவேண்டும் என்றும் அவர்கள் கோரினர். *சிறிலங்கா இனவெறி சிங்கள அரசிற்கு எதிராக கனடிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்த வீரகத்திப்பிள்ளை குணபாலசுந்தரம் அவர்களிற்கு ஆதரவு தெரிவித்துக் கனடியத் தமிழ் இளையோர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினர். *உலகில் எங்குமே என்றுமே ஏற்பட்டிராத மிகப்பெரும் மனிதப் பேரவலம் வன்னியில் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.
மே 07 2009
*இலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கிவிட்ட புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறினார். * "சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஓராயிரம் மக்களைப் பழிவாங்க வேண்டுமா? ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி" என்று கூறினார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா. *ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க எந்தத் தியாகமும் செய்யத்தயார்" என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 16ஆம் ஆண்டு ஆரம்ப விழாவில் உரையாற்றும் போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார். *வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியிலும், சிறிலங்க அரசின் மு்ள்வேலி முகாம்களிலும் அடைந்து கிடக்கும் மக்களின் பசியைப் போக்கிட உறுதியான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று லண்டனில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வரும் 3 தமிழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். *வன்னியின் தற்போதைய நிலவரம் என்ன?.. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்.விளக்கினார். *இலங்கையின் உண்மை நிலவரங்களை ஆராயும் பொருட்டு, நியாயமாக செயற்பட கூடிய சிறப்புத் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவின் தமிழருக்காக ஒபாமா என்ற அமைப்பு ஐக்கிய நாடுகளின் பொது செயலர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்தது. *பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுனியாவில் உள்ள அகதிகளை பார்வையிடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கின்றது. எனினும் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியது. *சோதனை நடைபெறும் இடங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவித்தார். *தமது இலங்கை விஜயம் உயிர்களை காக்கும் வகையில் அமையுமானால் அதனை பரிசீலிக்க தயார் : பான் கீ மூன் *இலங்கை யுத்தத்தில் பலியாவோர் தொடர்பில் ஏன் தகவல் குறைவாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி?
08 மே 2009
* கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வீதியில் பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்தனர். *யாழ்ப்பாணம் மாதகல் சென் தோமஸ் தேவாலயத்திற்குள் கடற்படையினர் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. *தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவதற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். *பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு * முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்தனர். *ஜேர்மனியில் டுஸில்டொர்ப் நகரில்பாராளுமன்றத்தின் முன்பாக கிரி, ராகுல் ஆகிய இளைஞர்களால் முன்னெடுக்கப்ட்ட உண்ணாநிலைப்போராட்டம் ஆறாவது நாளை எட்டியது. அவர்களது உடல்நிலை சோர்வை எட்டியது. *இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்றனர். *ஜேர்மனி, பேர்லினில் உள்ள சகல பொதுஅமைப்புக்களின் ஒத்துழைப்புடன் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் தூதரகத்தின் முன்றலில் அடையாள உண்ணாவிரதமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
09 மே 2009
*கனடா, மொன்றியலில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதுவராலயத்திற்கு முன்பாக மாலை 3 மணியளவில் அடங்காப்பற்று என்னும் மகுடத்தின் கீழ் மாபெரும் மனிதசங்கிலி பேரணியையும் வீதிமறிப்பு போராட்டத்தையும் நடத்தினர். பல்லாயிரம் மக்கள் பங்கேற்பு *வேல்ட் விசன் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் புளொட் அமைப்பு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. * இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மை கருதிதான் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம் என சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்ற திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசினார்.மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டென்றால் அது ஈழம்தான்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு. *இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் 12ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது. *இலங்கை விவகாரம் தொடர்பாக மே 11ம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. சபையில் கூட்டமொன்றை நடத்துமாறு பிரிட்டிஷ் வெளிவகார ஆமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும், பிரானக்ஸ் வெளிவிகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது. *பிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.இராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம் என்றார்.
10மே 2009
*மோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்கியிருந்த குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் எனக்கூறி 200 இளைஞர்கள் தம்மிடம் சரணடைந்ததாக தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்த இளைஞர்களை தென்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். *யுத்த சூன்ய பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இலங்கை அரசாங்கம் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்ற அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளரின் கருத்துக்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. *வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்தன. 11 மே 2009 * ஸ்ரீலங்கா இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் பாரிய எறிகனை வீச்சுக்களையும் அளவில்லாத கனரக ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என தமிழர் புனர்வாழ்வு கழகம் கோரிக்கை விடுத்தது. *விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கை இராணுவத்துக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கிவருவதாக இலங்கையின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாகிய ரணில் விக்ரமசிங்க பேட்டியொன்றின்போது தெரிவித்தார். *இலங்கை தீவுக்குள் தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயராம் ஜெயலலிதாவிற்கு அமெரிக்கா வாழ் ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு ”தமிழ் பாதுகாவலர்” என அழைத்து தமது ஆதரவை தெரிவித்தது. * கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு கூட்டத்தில் இயக்குனர் சீமான் உரையாற்றுகையில், இந்திய இராணுவத்தினை அனுப்பி தனி ஈழம் அமைத்து தருவேன் என்று பேசி வரும் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து, எமக்கு இராணுவ உதவி வேண்டாம். அதற்கு பதிலாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். *தமிழர்கள் மத்தியில் வட்டுக் கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் 98,9%வீதமான தமிழ் மக்கள் தமிழீழ தனி நாடு உருவாக வேண்டும் என வாக்களித்தார்கள். *"சிறீலங்கா அரசின் ஊடகத் தடையையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை வெளியுலகுக்கு காட்டிய Chanel 4 News செய்தியாளர் Nick Paton Walsh க்கு அவருடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் எம் மக்களுக்கு உதவுமாறு கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என உலக தமிழர் அமைப்பு கேட்டது. *யுத்தம் என்ற போர்வையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கேவலமான காரியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பாவிற்கு விஜயம் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். *வன்னியில் நூற்றுக்கணக்கான சிறார்கள் பலி: ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது.
12 மே 2009 *இலங்கை இனப்பிரச்சினையில் அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமா? என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக தொலைக்காட்சியான சி.என்.என் தொலைக்காட்சி வாக்குப் பதிவை மேற்கொண்டது. *யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். *இராணுவத்தினரால் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் இயலுமையை 48 மணித்தியாலங்களுக்குள் நிறுத்திவிட முடியும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். *முகத்துவாரம் கிம்புலாஹெல்ல பகுதியில் அதிகாலை 12.45 மணி அளவில் இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டார். *இலங்கையில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் கண் மூடித் தனமான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா தெரிவித்தது. *தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் பலவந்தமான முறையில் ஆயுத பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். *முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 56 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். *அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது. [மேலும்] [மேலும்]
| ||||||||||
|
| ||||||||||
|
|

பிரித்தானியா